04.04.2009 அன்று தளபதி ஜெயம் தளபதி பேரின்பம் தளபதி வீரத்தேவன் தலைமையிலான அணிகளையும் (எண்பது போராளிகள் ) அவர்களிற்குத் தேவையான பொருட்களையும் முள்ளிவாய்காலிலிருந்து நாயாற்று மலைப்பகுதியில் தரையிறக்கிவிட்டு அங்கிருந்த போராளிகளை முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுவருவதற்காகன பணி தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது.
அதற்கமைய கடற்புலிகளின்
விநியோக அணிகளும்( பதினைந்து படகுகள் )இவர்களுக்கான பாதுகாப்பை அதாவது (கடற்புலிகளின் சிறப்புத்தளபதி அவர்களாளால் ஒவ்வொரு விநியோக நடவடிக்கைக்கு
செல்லும்போது தமிழீழத்தின் எந்தப்பகுதியிலிருந்தும் விநியோக நடவடிக்கைமூலம் வரும் போராளிகளுக்கு எந்தவிதபிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக
இருக்கவேண்டும் என கடற்புலிகளின் கடற்தாக்குதல் அணிகளுக்கு தெரிவிப்பார். )சிறிலங்கா கடற்படையால், இத்தரையிறங்கு அணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட கடற்புலிகளின் கடற்தாக்குதலணிகளும் .ஒழுங்குபடுத்தப்பட்டு அணிகள் 03.04.2009 அன்று மாலை புறப்பட்டன.இருந்தும் எமது படகுகள் கூடுதலாக சென்று கொண்டிருந்ததால் எதிரியால் இணங்காணப்பட்டு, புறப்பட்டதிலிருந்து கடலுக்குள் எறிகணைகள் ஏவப்பட்டுக்கொண்டிருந்தான்.எப்படியாகினும் தமக்குகொடுக்கப்பட்ட பணிகளுக்கமைவாக விநியோக அணிகள் சென்று தமக்கானா இடத்தில் நிலைகொள்ள கட்டளை கிடைத்ததும். அதாவது 04.04.2009
அதிகாலை சுமார் மூன்று மணியளவில்
கேணல் வீரத்தேவனது அணியே முதலாவதாக இறங்கியது.நாமோ
சிறு அணி எமது போராளிகள் அனுபவமற்ற நீண்ட தூர கடற்பயணம் செய்ததாலும், காப்பரணற்ற நிலையிலும் அவ்வேளையில் கரையில் நின்ற மற்றும் மேலதிகமாக வந்த இராணுவத்தினருடன் இறுதிவரை போராடி வீரச்சாவடைகின்றனர்.அத்துடன் இம் முயற்சி பலனளிக்காததால் ஏனைய போராளிகள் கடற்புலிகளின் கடற்தாக்குதற் படையணியினரின் உதவியுடன் முள்ளிவாய்க்காலை வந்தடைந்தனர்.
அன்றைய நிகழ்வுகளிலிருந்தவர்களுடன்..
சு.குணா.